search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிழல் இல்லா நாள்"

    • எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம்.
    • உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    திருச்சி:

    தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வதுபோல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்கு உள்ளேயே விழுவதால் அதன் நிழலைப் பார்க்க முடியாது.

    இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். இந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கின்றனர்

    இதன்படி நடப்பாண்டு திருச்சி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை ( வியாழக்கிழமை) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19-ந்தேதி) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில்,

    இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம். உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிந்து கொள்ள https:// alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் சென்று, ஊர் பெயரை தட்டச்சு செய்தால் உரிய நேர விவரம் கிடைக்கும் என்றார்.

    • சூரியன் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் செங்குத்தாக அமையும்.
    • 7 மற்றும் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்த செயல்முறை வகுப்பு நடைபெற்றது.

    சூரியன் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் செங்குத்தாக அமையும்.இத்தகைய நாட்களில் நண்பகலில், நம் நிழல் நீளாமல், காலடியின் கீழே அமையும். இந்நாள், நிழல் இல்லா அல்லது பூஜ்ய நிழல்நாள் எனப்படுகிறது.

    இந்த நாளில் வானில் ஏற்படும் வானியல் சார்ந்த அறிவினை மாணவர்கள்அறிந்து கொள்ளும் விதமாகப் பள்ளியில் பயிலும் 7 மற்றும் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பள்ளியின் முதல்வர் பிரமோதினி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனாவுடன் இணைந்து பள்ளியின் அறிவியல் துறையை சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×